தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்கா கதவு மர்மநபர்களால் சேதம்

தாழக்குடி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்காவில் மர்ம நபர்கள் கதவுகளையும், மதுப் பாட்டில்களையும் உடைத்து பூங்காவை சேதப்படுத்தியுள்ளதால் அங்கு

Updated On :14 மே 2018, 7:23 pm

தாழக்குடி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்காவில் மர்ம நபர்கள் கதவுகளையும், மதுப் பாட்டில்களையும் உடைத்து பூங்காவை சேதப்படுத்தியுள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட சந்தவிளை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்கா உள்ளது. இப்பூங்காவில் தாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட தாழக்குடி, வீரநாராயணமங்கலம், மீனமங்கலம் காலனி, சந்தவிளை, தோப்பூர் போன்ற பகுதிகளில் சேகரிக்கப்படுகிற குப்பைகளை கொண்டு வந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனியாக பிரிக்கப்பட்டு குப்பைகளை உரமாக மாற்றுகிற பணி நடைபெற்று வருகிறது.
இப்பூங்காவில் தற்காலிக பணியாளர்களாக 18 பேர் வேலை பார்ப்பதாகவும், இதில் மூன்று பிரிவாக பிரிந்து குப்பைகளை தாழக்குடி பகுதிகளில் பொதுமக்களிடம் சேகரித்து இங்கு கொண்டுவந்து தரம் பிரிக்கிற பணியை செய்கின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்த போது பூங்காவின் முன்பகுதி இரும்புக் கதவு சேதப்படுத்தப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டு இருந்த பூஞ்செடி தொட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுப்பாட்டில்கள் உடைத்து போடப்பட்டு இருந்தன.
வேலைக்கு வந்த தொழிலாளர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.