மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோவாளையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

தோவாளையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On :14 மே 2018, 7:23 pm

தோவாளையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், யாக்கோபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்து தோவாளை, தேவர் நகர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றதாம். பின்னால் ஒரு சொகுசு காரும் வந்து நின்றதாம்.
அப்போது குமளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சொகுசுக் கார் மீது மோதியதாம். இதில், முன்னோக்கிச் சென்ற கார், முன்னால் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதாம். இதில், மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தினால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தகவலறிந்தது வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.