மார்த்தாண்டம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அனில்சேகர் (47). அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் காரணமாக கடந்த சில காலமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அனில்சேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







