மார்த்தாண்டம் அருகே ஆற்றுமணல் கடத்திச் சென்ற மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் கோயில் திருட்டை விசாரிக்க வந்த தனிப்படை போலீஸார் சனிக்கிழமை திக்குறிச்சி - பயணம் சாலையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதி வழியாக மினி லாரி வந்தது. போலீஸாரை கண்டதும் மினி லாரியை அதன் ஓட்டுநர் வேறு சாலை வழியாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீஸார் மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மார்த்தாண்டம் போலீஸார் விரைந்து சென்று மினி லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். இதில் ஆற்றுமணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆற்று மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் மார்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் என்பவரை கைது செய்தனர். வாகன உரிமையாளர் சாந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

