தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதனிடையே, பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மேம்பாலம் அமைந்தால் வணிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். எனவே, பாலம் அமைக்கும் முயற்சியை கைவிடக்கோரி மணலி சந்திப்பில் இருந்து கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் வரை இந்த மனித சங்கிலி நடத்தப்பட்டது.
இதில், அமைப்பின் தலைவர் அ.ரேவன்கில், பொதுச்செயலர் வை.விஜயகோபால், கௌரவத் தலைவர் எப்.எஸ்.முபாரக், , பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் சண்முகம், செயலர் மோசஸ் ஆனந்த், தணிக்கையாளர் ஜாபர்சாதிக், நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிகர்கள், பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

HYUNDAI Mobis தொழிற்சாலையில் தீ விபத்து! தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


