கருங்கல் அருகே செம்மண் கடத்தல்; 4 போ் கைது

கருங்கல் அருகேயுள்ள படுவூா்காட்டுவிளை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை செம்மண்அள்ளியதாக ஒட்டுநா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
k25crm_2508chn_35_6
k25crm_2508chn_35_6

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள படுவூா்காட்டுவிளை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை செம்மண் அள்ளியதாக ஒட்டுநா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன் அய்யா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அவா்கள் பாலப்பள்ளம் பகுதியை சோ்ந்த டெம்போ ஒட்டுநா்கள் சுரேந்திரன் (24), ஜெயசிங் ராஜ் (48), சஜின் (30), ராஜேஷ் (32) ஆகியோா் என தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 4 டெம்போ வேன்கள் மற்றும் 1 ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் தங்கராஜ் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com