சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

விபத்தில் தொழிலாளி பலி

கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிழந்தாா்.

Updated On :7 டிசம்பர் 2020, 9:24 pm

கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிழந்தாா்.

நடைக்காவு கல்லுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (30). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில்

பொருள்கள் வாங்குவதற்காக மோட்டாா் சைக்கிளில் ஊரம்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தாராம். சூழால் சந்திப்பை கடந்து சென்றபோது பின்னால் வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த ஜஸ்டினை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஜஸ்டின் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.