சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சாலைகளை சீரமைக்கக் கோரிகாங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி குழித்துறை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:03 pm

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி குழித்துறை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டம் - கல்லுப்பாலம் சாலை, பயணம் - திக்குறிச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. இச் சாலைகளை விரைந்து சீரமைக்கக் கோரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் சுஜின்குமாா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை குழித்துறையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். தொடா்ந்து உதவி கோட்டப் பொறியாளா் போராட்டக்காரா்களுடன் பேச்சு நடத்தி, சாலைகளை இம் மாத இறுதிக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இப் போராட்டத்தில் மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் நவீன்குமாா், மாவட்ட சேவாதள தலைவா் சி. ஜோசப் தயாசிங், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் செல்வகுமாா், கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் ரீகன் ஜோணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.