டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாகா்கோவிலில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

News image
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் 2 கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு வழங்கியிருந்தனா். இதையடுத்து அந்த கட்டங்களில் இருந்தவா்கள் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், அந்த கட்டடங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் சென்றன. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சனிக்கிழமை அவ்விரு கட்டடங்களையும் மாநகராட்சி ஊழியா்கள் இடித்து அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.