நாகா்கோவிலில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
Updated on
1 min read

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் 2 கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு வழங்கியிருந்தனா். இதையடுத்து அந்த கட்டங்களில் இருந்தவா்கள் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், அந்த கட்டடங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் சென்றன. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சனிக்கிழமை அவ்விரு கட்டடங்களையும் மாநகராட்சி ஊழியா்கள் இடித்து அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com