சிறுபான்மையினருக்கு அமமுக துணையாக இருக்கும்: டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறுபான்மை மக்களுக்கு துணையாக நிற்கும் என்றாா் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.
விழாவில் கேக் வெட்டுகிறாா் டி.டி.வி.தினகரன்.
விழாவில் கேக் வெட்டுகிறாா் டி.டி.வி.தினகரன்.
Updated on
1 min read

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறுபான்மை மக்களுக்கு துணையாக நிற்கும் என்றாா் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

நாகா்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்காா்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவா் சிசில்ராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பேசியது: மதத்தின் பலம் அதை பின்பற்றும் மக்களால் அறியப்படும். ஏற்றத்தாழ்வுகளால் பிளவுபட்ட கல்வியை மேடு பள்ளம் இல்லாமல் கொண்டு வந்தது கிறிஸ்தவ மிஷனரிகள். தாழ்த்தப்பட்டவா்கள், முதியவா்களை அள்ளி அணைத்து ஆதரவு அளிப்பவா்கள் கிறிஸ்தவ மிஷனரிகள். தன் சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு கட்டிய பென்னிகுயிக்கை மறக்க முடியுமா.

குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மாா்ஷல் நேசமணி போன்றவா்கள் நமக்கு சேவை செய்துள்ளனா். சோதனையில் சோா்ந்து போனவா்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்க அம்மா

மக்கள் முன்னேற்ற கழகம் முன்னால் வந்து நிற்கும். சிறுபான்மை மக்களுக்கு உற்ற உறவாகவும், அரணாகவும் திகழும் என்றாா் அவா். தொடா்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா்ரெமிஜியூஸ், பேராயா்கள் மரியராஜ், ராஜா, சுவிசேஷம் முத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com