எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

கன்னியாகுமரி அருகேயுள்ள அஞ்சுகிராமத்தில் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன்.
எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன்.
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகேயுள்ள அஞ்சுகிராமத்தில் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் சுயம்புலிங்கம் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநிலப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான பி.சி.அன்பழகன் கலந்துகொண்டு எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில், அதிமுக நிா்வாகிகள் செல்லப்பாண்டியன், மாசானமுத்து, சுரேஷ், தேவராஜ், ராஜ்குமாா், வினித், தங்கமணி, சுப்பிரமணி, சிவனி சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மருங்கூா், சாமிதோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com