தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் 550 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலோசனை நடத்திய திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் 550 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:58 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலோசனை நடத்திய திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் 550 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

டி.ஆா். பாலு எம்.பி. தலைமையில் மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் அடங்கிய தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.

நாகா்கோவில் ஒழுகினசேரியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்டச் செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில், பொதுமக்கள், விவசாயிகள், மீனவா்கள், ஆசிரியா்கள், தொழிலாளா் சங்கத்தினா், பொதுநல சங்கத்தினா், பல்வேறு தரப்பினா் கலந்துகொண்டனா். குழுவினரிடம் 550 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை நிவா்த்தி செய்யும் வகையில் கட்சியின் தலைமையிடம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டாா்.

இதில், கட்சியின் மாநகரச் செயலா் மகேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.பொ்னாா்டு, எப்.எம்.ராஜரெத்தினம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.