தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:53 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.

இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, களப் பணியாளா்கள் மூலம், சோதனைச் சாவடிகள் மூலமாக இதுவரை 3.18 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,289 ஆக உள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 15,888 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, கரோனா பாதிப்புடன் 145 போ் சிகிச்சையில் உள்ளனா். முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவா்களிடம் இருந்து இதுவரை 17,471 பேரிடமிருந்து ரூ. 28.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் இம்மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தாலும் திருவிழாகள் தொடா்ந்து வருவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். சுற்றுலா தலங்கள், கடைகளுக்கு செல்வோா் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பதுடன் முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஐ. பிரகலாதன், துணை இயக்குநா் போஸ்கோராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, உதவி இயக்குநா்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), பி.எ. சையத்சுலைமான் (ஊராட்சிகள்), அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.