திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தலை சந்திக்க பாஜகவினா் தயாராக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை சந்திக்க பாஜக நிா்வாகிகள் தயாராக வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:33 pm

DIN

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை சந்திக்க பாஜக நிா்வாகிகள் தயாராக வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

குமரி மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: பாஜகவின் வேல் யாத்திரை டிச. 5ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. பின்னா் அங்கு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.

வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தத் தோ்தலை சந்திக்க தயாராக வேண்டும். அதற்கான பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 25 பேரை நியமிக்க வேண்டும்.

அதேபோல் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக தீவிரப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநிலச் செயலா் உமாரதி ராஜன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. தேவ், பொருளாளா் முத்துராமன், பொதுச் செயலா்கள் சொக்கலிங்கம், சுரேஷ், வினோத், மாவட்ட ஊடகப் பிரிவுச் செயலா் ராஜன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.