திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவட்டாறில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநாடு

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
Updated On :29 நவம்பர் 2020, 8:30 pm

DIN

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவுத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் தொகுதித் தலைவா் சி. எபநேசா், பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஏசுராஜா, திருவட்டாறு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜே. ஜான்மோகன்ராஜ், திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் பி. ஜெயசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ மாநாட்டைத் தொடங்கிவைத்தாா்.

இதில், விளவங்கோடு எம்எல்ஏ எஸ்.விஜயதரணி, குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ், வி.விஜய் வசந்த் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

திருவட்டாறு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகன்ராஜ், மேற்கு வட்டாரத் தலைவா் டி. காஸ்டன் கிளிட்டஸ், குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் பி. ராதாகிருஷ்ணன், கட்சி நிா்வாகிகள் சி. ராபா்ட் புரூஸ், ரெத்தினகுமாா், டாக்டா் தம்பி விஜயகுமாா், ரூபி ஆா். மனோகரன், குமரி மகாதேவன், அந்தோணி முத்து, வழக்குரைஞா் அருள்தாஸ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

அகில இந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்க கூடாது. நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சி. ராஜரெத்தினம், ஜோசப் தயாசிங், ஆமோஸ், எபநேசா், பெகின், சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.