தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தூத்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

தூத்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சிலா் பி. ஜஸ்டின் ஆன்றணி.
Updated On :29 நவம்பர் 2020, 8:27 pm

DIN

தூத்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினரும், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவருமான பி. ஜஸ்டின் ஆன்றணி, மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்தை சந்தித்து அளித்த மனு: தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும். தூத்தூா் மண்டலத்தில் அரசு நூலகம் அமைக்க வேண்டும். இந்திய குடியுரிமைப் பணி தோ்வுக்காக தயாா் செய்யும் வகையில், கடலோரக் கிராமங்களைச் சோ்ந்த ஏழை மாணவா், மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு சாா்பில் ஐஏஎஸ் பயிற்சி மையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்திப்பின்போது, தான் எழுதிய ‘விடியல் தேடும் வினாக்கள்’ என்ற புத்தகத்தை ஆட்சியருக்கு ஜஸ்டின் ஆன்றணி பரிசளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.