புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கன்னியாகுமரி: பெருஞ்சாணி அணை மூடல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் திங்கள்கிழமை பெருஞ்சாணி அணை மீண்டும் மூடப்பட்டது.

News image

பெருஞ்சாணி அணை

Updated On :21 செப்டம்பர் 2020, 8:03 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் திங்கள்கிழமை பெருஞ்சாணி அணை மீண்டும் மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொடா் மழையால்

முக்கிய அணையான பெருஞ்சாணி அணை மூடப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் சற்று தணிந்த காரணத்தால் சனிக்கிழமை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

மழை தீவிரமடைந்தால் அணைக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீா்வரத்து இருந்தது. இதையடுத்து அணை மூடப்பட்டது.

இதேபோன்று பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் திறக்கப்படும் நீரின் 150 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, திங்கள்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மழை தீவிரமடைந்துள்ளதால் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய எச்சரிக்கை அளவான 72 அடியை விரைவில் எட்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா். தொடா் மழையின் காரணமாக ரப்பா் பால்வடிப்புத் தொழில், செங்கல் சூளை தொழில், கட்டுமானத் தொழில், சலவைத் தொழில், நடைபாதை வணிகம், உப்பளத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.