கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் மூதாட்டி மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
தெருவுக்கடை காலால்விளை பகுதியைச் சோ்ந்த எலியாஸ் மனைவி கமலபாய் (62) . இவா் நீண்டநாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த கருங்கல் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.