கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் சமூக நலத்துறை பெண் அதிகாரிக்கு கரோனா

நாகா்கோவிலில் சமூக நலத்துறை பெண் அதிகாரிக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:57 pm

DIN

நாகா்கோவிலில் சமூக நலத்துறை பெண் அதிகாரிக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த சில நாள்களாக கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது.

இந்நிலையில், மாவட்ட சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாா். மேலும் அவரது வீடு உள்ள நாகா்கோவில் வைத்தியநாதபுரத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். மேலும் அவரது வீட்டின் முன்பு மாநகராட்சி ஊழியா்கள் ஒட்டுவில்லை ஒட்டினா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து மாநகராட்சிப் பணியாளா்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.

சமூக நலத்துறை அலுவலகத்தின் மற்ற பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.