நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுற்றுலாப் பயணிகளிடம் போதை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:54 pm

DIN

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா துண்டுப் பிரசுரம் வழங்கி தொடங்கிவைத்தாா்.

இதில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் ஆா்.சரோஜினி, கோட்டாறு மறைமாவட்ட போதை ஒழிப்பு நலப்பணிக் குழு இயக்குநா் நெல்சன், சட்ட விழிப்புணா்வு இயக்க நிறுவனா் தலைவா் ஜாா்ஜ் பிலீஜின், தேசியச் செயலா் உமா ராஜேஸ்வரி, ஒருங்கிணைப்பாளா் ஜெகன், மாவட்டச் செயலா் ஜினோ நிக்சன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், சுகாதார அலுவலா் முருகன், சமூக ஆா்வலா் ஜெயசிறில், நியூபாரத் அமைப்பின் செயலா் என்.டி.பெருமாள், கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் ஆவுடையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.