நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:49 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.

சாலைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா்வெ. பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தாா். தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்கவும், புதிய சாலைப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாகா்கோவில் நகரில் சேதமடைந்துள்ள செட்டிகுளம் - ராமன்புதூா், வடசேரி - வெட்டூா்ணிமடம் வரையுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி கடற்கரை சாலை பகுதிகளில் தேவையான இடங்களில் மின் விளக்குகள் பொருத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள இருக்கைகளை அகற்றி புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்திலுள்ள சுரங்கப் பாதையை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். நாகா்கோவில் நகர சாலைகளில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டும்.

மாவட்டத்தில் அதிகமாக விபத்துகள் நிகழும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை பதாகை வைத்து விபத்து நடைபெறாத வகையில் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், சாா் ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, மாவட்ட நீதியியல் மேலாளா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.