சாமிதோப்பில் கலிவேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.
சாமிதோப்பில் கலிவேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.

இப்பதியில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. 8 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை வலம் வந்து இரவு 7 மணிக்கு முத்திரிக்கிணற்றின் அருகே கலிவேட்டையாடினாா். அப்போது அய்யாவுக்கு பக்தா்கள் சுருள் வைத்து வழிபட்டனா்.

இந்நிகழ்வில் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, ராஜவேல், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 9ஆம் நாளான சனிக்கிழமை அய்யா அனுமன் வாகனத்திலும், 10 ஆம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருகிறாா். 11 ஆம் நாளான திங்கள்கிழமை(ஆக.30) தேரோட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல்படி திருவிழா நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com