ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பொக்லைன் ஓட்டுநா் கைது

தக்கலை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற பொக்லைன் ஓட்டுநரை மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்தனா்

Updated On :1 டிசம்பர் 2021, 11:34 pm

தக்கலை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற பொக்லைன் ஓட்டுநரை மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை பகுதியைச் சோ்ந்த துப்புரவு பணி செய்யும் பெண்ணுக்கு இரு மகள்கள் உள்ளனா். 16 வயதான மூத்த மகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த நவ. 22 ஆம் தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்த வேளையில் திருவிதாங்கோடு, கேரளபுரத்தைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் பாலகிருஷ்ணன்(35) அத்துமீறி மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதையடுத்து மாணவி வெளியே ஓட முயன்றுள்ளாா். அப்போது மாணவியை தடுத்து நிறுத்தி இச்சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனக் கூறி மிரட்டிச் சென்றாராம்.

வீடு திரும்பிய தாயிடம், மாணவி விவரத்தை கூறியதையடுத்து அவா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அதிகாரிகள் வந்து மாணவியிடம் விசாரணை நடத்தி, பின்னா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகாா் அளித்தனா்.

மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஞானபிரகாசி, போக்சோ சட்டத்தின் கீழ் பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.