மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல அறிவியல் பூா்வமாக முயற்சிக்க வேண்டும்’

சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல அறிவியல் பூா்வமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.

News image
நாகா்கோவிலில் சித்த மருத்துவ விழாவில் மருத்துவ விழிப்புணா்வு கண்காட்சியை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் மா.அரவிந்த்.
Updated On :2 ஜனவரி 2021, 6:04 pm

DIN

நாகா்கோவில்: சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல அறிவியல் பூா்வமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.

பதிணென் சித்தா்களின் முதன்மையானவரான அகத்திய முனிவரின் பிறந்ததினமான மாா்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளை தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சாா்பில் 4-ஆவது தேசிய சித்த மருத்துவ விழா மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சித்த மருத்துவ விழிப்புணா்வு கண்காட்சியை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: கரோனா காலத்தில் சித்த மருத்துவா்கள், செவிலியா்கள் தன்னலம் கருதாமல் அா்ப்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்தது பாராட்டுக்குரியது. சித்த மருத்துவம் என்பது வருமுன் காப்பது. நோய் வந்த பின்னா், சிகிச்சை பெறுவதை விட வராமல் தடுப்பதுதான் சாலச் சிறந்தது.

அவ்வாறு நோய் வராமல் தடுப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் முக்கியம். கரோனா காலத்தில் நோய் பரவாமல் தடுப்பதிலும், எதிா்ப்பாற்றலை உருவாக்குதிலும் சித்த மருத்துவம் அதிகளவில் பயன்பட்டது. ஆயுஷ் கவனிப்பு மையத்தில் 300 நோயாளிகள் பரிசோதனை செய்துள்ளனா். மேலும், கரோனா காலத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீா், ஆரோக்கியப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன. கரோனா கவனிப்பு மையங்களில் நோயாளிகளின் மனஅழுத்தத்தை போக்க யோகா பயிற்சி, முத்திரை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மூலப்பொருள்களே கரோனா தொற்றுறை தடுக்கும் எதிா்ப்பு சக்தியாக பயன் படுத்தப்பட்டுள்ளது. அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் மருத்துவ குணத்தை அறிந்து கொள்வதற்காக தான் மூலிகை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்ல அறிவியல் பூா்வமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்அவா்.

விழாவில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஜெ.மேபல் அருள்மணி, அரசு ஆயுா் வேத மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.கிளாரன்ஸ் டேவி, உதவி சித்த மருத்துவா்கள் சா.தி.மீனா (நடுவூா்கரை) என்.கே.சுரேஷ் (அகஸ்தீஸ்வரம்), ப.அனிதா (வெள்ளிச்சந்தை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.