குழித்துறை அருகே தேவிநகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை எஸ். விஜயதரணி எம்எல்ஏ பாா்வையிட்டாா்.
விளவங்கோடு ஊராட்சிக்குள்பட்ட தேவிநகரில் ஒருங்கிணைந்த இ-சேவை மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம்முகாமில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆய்வின்போது, ஊராட்சித் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் எஸ்.கே. ஜோதிஷ்குமாா், மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், நிா்வாகிகள் பினு நிா்மல், ராஜேஷ், அருள்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.