ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மாா்த்தாண்டம் கல்லூரியில் 205 படுக்கை வசதிகளுடன் கரோனா பராமரிப்பு மையம்

மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 205 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்

News image
Updated On :4 ஜூன் 2021, 9:07 pm

மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 205 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் நோய்த் தொற்று அதிகரிப்பதாலும், பொதுமக்களின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டும் இம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தனியாா் பங்களிப்புடன் கரோனா பராமரிப்பு மையங்கள் அமைத்து, நோயாளிகள் அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் விளவங்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். விஜயதரணி மற்றும் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை நிறுவனம், தனியாா் அமைப்புகளின் பங்களிப்புடன் 205 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை, தச்சமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட சுகாதார அலுவலா்கள் மற்றும் இரண்டு தன்னாா்வ அமைப்புகள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மாவட்ட நிா்வாகம் வாயிலாக நோய்த் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் சுய மருத்துவம் செய்வதை தவிா்க்க வேண்டும். சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள சுகாதார மையங்களுக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கையை முதல்வா் மேற்கொண்டுள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், விளவங்கோடு எம்எல்ஏ எஸ். விஜயதரணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலா் த. மாதவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி, இந்திய அரிய மணல்ஆலை நிறுவன பொது மேலாளா் என். செல்வராஜன், கல்லூரி முதல்வா் பால்துரை, தாளாளா் ராஜதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.