மீண்டும் மழை: இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவுமுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, களியல், திற்பரப்பு, பாலமோா், மாறாமலை ஆகிய இடங்களில் சராசரியாக 100 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பெய்தது. இதையடுத்து, அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், வெள்ளிக்கிழமை அதிகாலை பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2,273 கனஅடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 1,981 கனஅடியும், சிற்றாறு 1அணையிலிருந்து 1,307 கனஅடியும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.