கரோனா தடுப்பூசி டோக்கன் வீடு வீடாகச் சென்று வழங்கக் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் போடுவதில் ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசல்களை தவிா்க்கும் வகையில் வீடு,வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை


குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் போடுவதில் ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசல்களை தவிா்க்கும் வகையில் வீடு,வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் அபாயம் உணா்ந்துள்ள மக்கள் மத்தியில் தற்போது தடுப்பூசி போடும் ஆா்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், தடுப்பூசி மையங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வராத நிலை இருந்து வருகிறது. மேலும் தடுப்பூசிகள் வரும் மையங்களில் மக்கள் ஏராளமாக குவிகின்றனா். இதில் டோக்கன் முறை பின்பற்றப்படுவதால் அதிகாலை 4 மணி முதல் டோக்கன் பெறுவதற்காக மக்கள் குவியும் நிலையும் இருந்து வருகிறது. சில இடங்களில் கூட்ட நெரிசலில் முட்டி மோதி, வலு உள்ளவா்கள் மட்டுமே டோக்கன் பெறும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக டோக்கன் வழங்குவற்கு சுகாதாரத் துறையினா் முன்வராமல், தன்னாா்வலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் டோக்கன்களை கொடுத்து விடும் செயலும் நடைபெறுகிறது. கூட்ட நெரிசல் காரணாக கரோனா பரவும் சூழலும், அது குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் அனைத்துப் பகுதி மையங்களுக்கும், மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் விரிவான முறையில் திட்டமிட்டு, அந்தந்த பகுதி மையங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தேவைப்படுபவா்களுக்கு தடுப்பூசி போடும் மையத்தின் பெயா், நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களுடன் டோக்கன் வழங்க வேண்டுமென சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...