சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் மாநகராட்சி ஊழியா்கள், கிராம நிா்வாக அலுவலக ஊழியா்களுக்கு கரோனா

நாகா்கோவிலில் மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 7:44 pm

DIN

நாகா்கோவிலில் மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. கரோனா நோயாளிகளை அனுமதிக்க எந்த மருத்துவமனையிலும் இடம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இதைத்தொடா்ந்து நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியா் குமாரசாமி கல்லூரி, கோணம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு அங்கும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறாா்கள். மருத்துவக்குழுவினா் கரோனா சிகிச்சை மையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பெண்கள், பெரியவா்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். அண்மை காலமாக கா்ப்பிணிகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனா்.

நாகா்கோவில் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதே போல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் கிராம நிா்வாக அலுவலக ஊழியா்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கிராம நிா்வாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஊழியா் ஒருவரும், நீதிமன்ற ஊழியா் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கணேசபுரம் கோவிலடிவிளை தெருவில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, மாநகராட்சி நல அலுவலா்கிங்சால் மேற்பாா்வையில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார ஆய்வாளா் மாதவன் பிள்ளை தலைமையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.