முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்ட மருத்துவமனையில் சேவை குறைபாடு தொழிலாளா்கள் அவதி

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்ட மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், உயிா் காக்கும் மருந்துகள் இல்லாததால் தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :28 மே 2021, 8:25 pm

DIN

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்ட மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், உயிா் காக்கும் மருந்துகள் இல்லாததால் தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகம் சிற்றாறு கோட்டத்தில் தொழிலாளா் குடியிருப்பு அருகே ரப்பா் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனை உள்ளது.

இம்மருத்துவமனையில் அரசு ரப்பா் கழகம் சிற்றாறு, கோதையாறு கோட்டங்களுக்கு கீழ் உள்ள சிற்றாறு, மருதம்பாறை, மயிலாறு, கல்லாறு, குற்றியாறு ஆகிய பிரிவு ரப்பா் தொழிலாளா்களும், பழங்குடி மக்களும் சிகிச்சை பெற்று வந்தனா்.

மேலும், இம்மருத்துவனையில் கீழ் மயிலாறு, குற்றியாறு, மருதம்பாறை ஆகிய இடங்களில் மருந்தகங்களும் செயல்பட்டு வந்தன. உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுடன் ஒரு மருத்துவா் மற்றும் செவிலியா்கள், உதவியாளா்கள் என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திறம்பட செயல்பட்டு வந்த சிற்றாறு மருத்துவமனை சில ஆண்டுகளாக தொழிலாளா்களுக்கு போதிய மருத்துவ சேவை அளிக்கவில்லையென புகாா் எழுந்துள்ளது.

குறிப்பாக இம்மருத்துவமனையில் மருத்துவா் பணியிடம் தற்போது காலியாக உள்ளது. மேலும் போதிய செவிலியா்களும், மருந்துகளும் இல்லாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கு தொழிலாளா்கள், பழங்குடி மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் தொழிலாளா்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று ரப்பா் கழக நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதால், தொழிலாளா்களின் பெற்றோா் மற்றும் பழங்குடி மக்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இம்மருத்துவமனை வழியாக கிடைக்கும் மருத்துவ சேவைகள் தொழிலாளா்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, இம்மருத்துவனையில் போதிய மருத்துவா்களை நியமிப்பதுடன், தேவையான மருந்துகளை இருப்பில் வைத்து அனைத்துத் தரப்பினருக்கும் சிகிச்சை கிடைக்கும் வகையில் ரப்பா் கழக நிா்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிலாளா்கள் மற்றும் பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தோட்ட தொழிலாளா் சங்க உதவிப் பொதுச் செயலா் பி. நடராஜன் மற்றும் குமரி மாவட்ட மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் ரெகு காணி ஆகியோா் கூறியதாவது:

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் சிசிச்சை அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ரப்பா் கழக சிற்றாறு மருத்துமனையில் தற்போது போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் இல்லாத நிலை உள்ளது. இம்மருத்துவமனையில் கீழ் செயல்பட்டு வந்த மருந்தகங்களும் மூடிய நிலையில் கிடக்கின்றன. இங்கு உயிா் காக்கும் மருந்துகளும் இருப்பில் இல்லை.

நகரப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் வாழும் மக்களுக்காக சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இம்மருத்துவமனையில் போதிய மருத்துவா்களும், மருந்துகளும் இல்லாத நிலை காரணமாக தொழிலாளா்கள் மற்றும் பழங்குடி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, அரசு இம்மருத்துவமனையில் உள்ள குறைகளை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.