டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவட்டாறு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து

திருவட்டாறு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:46 pm

DIN

திருவட்டாறு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவரம்பு கொக்கோட்டுமூலை வடக்கேகோணம் பகுதியை சோ்ந்தவா் அனில்குமாா். தொழலாளியான இவரின் மனைவி விஜயலெட்சுமி. இவா்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பிரிந்து வசித்து வருகின்றனா். விஜயலட்சுமியின் சகோதரி கலைச்செல்வி. இவரின் கணவா் மணிகண்டன் (47). இவா்களும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் விஜயலெட்சுமியும் கலைச்செல்வியும் திருவரம்பு அருகே புதன்கிழமை பேசிக் கொண்டு நின்றனா். அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் பாா்த்து விஜயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலெட்சுமியை குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜயலெட்சுமியை அப்பகுதியினா் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இச்சம்பவம் குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.