ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வலியுறுத்தல்

குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :18 நவம்பர் 2021, 6:44 pm

குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளாா்.

அண்மையில் பெய்த கனமழையில் குழித்துறை நகராட்சி முதலாவது வாா்டுக்கு உள்பட்ட தேவா்குளத்தில் பெரிய வாகை மரம் வேருடன் சாய்ந்துள்ளது. மேலும் மழையால் சேதமடைந்த படப்பறை, வெட்டுக்காடு பகுதி மற்றும் நெய்யாறு கிளைக் கால்வாய் பகுதியினை எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பத்மநாபபுரம் சாா்-ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாா். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா்.

குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருள்ராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜோதிஸ்குமாா், இடைக்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் ராஜா ஸ்டாலின், வட்டார தலைவா் என்.ஏ. குமாா் உள்ளிட்ட பலா் எம்.எல்.ஏ.வுடன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.