குமரி மாவட்ட பொதுமக்களிடையே கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதன் அடிப்படையில், இதுவரை முதல் கட்டமாக 9,53,345 பேருக்கும், 2 ஆம் கட்டமாக 2,76,461 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நமது மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியா் அரவிந்த், அா்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், அலுவலா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள்அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.