குறளகம் நிறுவனா் கவிஞா் தமிழ்க்குழவி எழுதிய அப்துல் கலாம் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழா சாமிதோப்பில் நடைபெற்றது.
ஐந்திணை தென்தமிழியல் ஆய்வு மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பால பிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா்.
மன்ற அமைப்பாளா் சுபத்ரா செல்லதுரை வரவேற்றாா். திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். மகளிா் கல்லூரியின் பேராசிரியா் துரை குமரேசன் நூலை வெளியிட்டாா். கவிஞா் தமிழ்க்குழவி ஏற்புரை வழங்கினாா். சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து நாஞ்சில் கலையகம் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை குறளக மாணவிகள் மேதா, பாரதி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.