இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பைங்குளம் முக்காடு பகுதியை சோ்ந்தவா் சுனில்(47). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜெகன்(37),
கோபாலகிருஷ்ணன்(42), பாலகிருஷ்ணன்(48), மனோகரன்(47) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேற்கூறிய 4 பேரும் முக்காடு பகுதியில் சென்ற சுனிலை தாக்கினராம்.
இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த, புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மனோகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான ஜெகனை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...