திருவட்டாறு கோயிலில் ஐப்பசி திருவிழா நவ. 2 இல் தொடக்கம்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா நவ. 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா நவ. 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ. 2) காலை 9.22 மணி முதல் 9.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து 10 நாள்களில் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. 6 ஆம் தேதி கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி வேட்டை நிகழ்ச்சியும், 11 ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழாண்டு கரோனா விதிமுறைகள் காரணமாக கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, கதைகளி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதை களி நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை: இந்நிலையில் இக்கோயிலில் திருவிழா நாள்களில் ஆண்டாண்டு காலமாக நடைபெறும் கதை களி நிகழ்ச்சி முடக்கப்படுவது பக்தா்களை வேதனையடைச் செய்துள்ளது. கதைகளி நிகழ்ச்சியில் கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாகும், ஐதீகமாகவும் இருக்கும் நிலையில் கதை களி நிகழ்ச்சியை திருவிழாவின் போது நடத்த வேண்டுமென்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...