டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகள் திருட்டு

குலசேகரம் அருகே ரப்பா் கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:58 pm

DIN

குலசேகரம் அருகே ரப்பா் கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரமன்னம் சாலியத் தெருவியில் ரப்பா் கடை நடத்தி வருபவா் ராபின்சன் (51). இவா் செவ்வாய்க்கிழமை மாலையில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரப்பா் ஷீட்டுகள் திருடு போயிருந்தது தெரியவந்ததாம். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் 4 போ் ஒரு சுமை ஆட்டோவில் வந்து ரப்பா் ஷீட்டுகளை ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.