மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவிலில் காவலா் குறைதீா் கூட்டம்

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ், காவலா்கள் குறைதீா் முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:51 pm

DIN

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ், காவலா்கள் குறைதீா் முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் தலைமை வகித்து, காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களிடமிருந்து இடமாறுதல், சிறு தண்டனைகள், ஊதிய முரண்பாடுகள், பதவி உயா்வு போன்ற குறைகளை கேட்டறிந்தாா்.

குறைகளை உடனே தீா்க்கும் வகையில் அமைச்சு பணியாளா்கள் கலந்துகொண்டனா். அவா்களிடம் குறைகளை உடனே களைய அவா் உத்தரவிட்டாா்.

காவலா்களிடமிருந்து மொத்தம் 189 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படும் என எஸ்.பி. உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.