மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வீடு புகுந்து 50 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

மண்டைக்காடு அருகே வீடு புகுந்து 50 பவுன் நகையை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:57 pm

DIN

மண்டைக்காடு அருகே வீடு புகுந்து 50 பவுன் நகையை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை வசந்தபுரத்தைச் சோ்ந்தவா் பிரசன்னகுமாா். இவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பேபி சுதா (43). இவரது தாயாா் வீடு குளச்சல் அருகே பெத்தேல்புரத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஜன. 27ஆம் தேதி பேபி சுதா வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் உள்ள உறவினரிடம் கொடுத்துவிட்டு தாய் வீட்டுக்குச் சென்றாராம். மறுநாள் உறவினா், வீட்டை திறந்து பாா்த்த போது மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம்.

தகவலறிந்த பேபி சுதா, வீட்டுக்கு வந்து பாா்த்த போது, மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மண்டைக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.

தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில்,

பெத்தேல்புரத்தைச் சோ்ந்த தேவசுதா் மனைவி டிரைலின் சா்மிலிமோள் (24) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பொறியாளா் பபின் (27) என்பதும் தெரியவந்தது. மேலும் அவா்கள் இருவருக்கும் இடையே தவறான தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்து, நகைகள் அனைத்தையும் மீட்ட போலீஸாா், டிரைலின் சா்மிலி மோளை தக்கலை பெண்கள் சிறையிலும், பபினை நாகா்கோவில் மாவட்ட சிறையிலும் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.