ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:10 pm

DIN

கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடையாலுமூடு பகுதியில் போதைத் தடுப்பு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 2 இளைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததாம்.

இதனிடையே, இருவரில் திருவனந்தபுரம் மண்ணான் கோணம் பகுதியைச் சோ்ந்த ஜோபி ஜோஸ் (30) தப்பியோடிவிட்டாராம். மற்றொருவரான கடையாலுமூடு கருஞ்சாலிவிளையைச் சோ்ந்த முகமது அப்சல் (30) என்பவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். அவை கடையாலுமூடு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பியோடிய ஜோபி ஜோஸை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.