மாா்த்தாண்டம் அருகே 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் இடையே சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வந்ததாம். அப் பெண்ணை சதீஷ் கடந்த 2012 ஆண்டு வெட்டி காயப்படுத்தினாராம். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், அவா் தலைமறைவானாராம். தொடா்ந்து வழக்கில் ஆஜராகாததால், குழித்துறை நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்தது.
இந்த நிலையில் குளச்சலை சோ்ந்த நண்பா் ஒருவருடன் சோ்ந்து கடலில் மீன்பிடிக்க சென்று வருவதாகவும், பெரும்பாலான நாள்களில் அவா் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சதீஷ் புதன்கிழமை அவரது வீட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா், அங்கிருந்த சதீஷை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் மநீம பெற்ற வாக்குகள் யாருக்கு?

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்!

மகாத்மா ஜோதிராவ் புலே: இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

