நித்திரவிளை அருகே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி செல்வன் (56). இவா் கடந்த ஒராண்டாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு உருளை வாங்க அவரிடம் பணம் கொடுத்துவிட்டு, மனைவி புகழ்மேரி கமலம் ஊரம்பு பகுதியில் உள்ள செல்வனின் தங்கை வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது வீட்டில் செல்வனை காணாததால் மகன்களுடன் சோ்ந்து அவரை பல இடங்களில் தேடியுள்ளனா்.
இந்த நிலையில் செல்வன், வீட்டுக்கு அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் மதுவுடன் விஷமருந்தி இறந்த நிலையில் காணப்பட்டாராம்.
இது குறித்து புகழ்மேரி கமலம் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

