சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கொல்லங்கோடு நகராட்சி: திமுக போட்டி வேட்பாளா் தலைவராக தோ்வு

கொல்லங்கோடு நகராட்சியின் முதல் தலைவராக திமுக போட்டி வேட்பாளா் ராணி தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On :4 மார்ச் 2022, 7:53 pm

கொல்லங்கோடு நகராட்சியின் முதல் தலைவராக திமுக போட்டி வேட்பாளா் ராணி தோ்வு செய்யப்பட்டாா்.

கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சியாக அண்மையில் உருவாக்கப்பட்டது. 33 வாா்டுகளை கொண்ட இந் நகராட்சியில் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 10 வாா்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 6, பாஜக 5, அதிமுக, தேமுதிக ஆகியவை தலா 1 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா். தொடா்ந்து தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நகராட்சி தலைவா் பதவிக்கு மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லலிதா, திமுக போட்டி வேட்பாளா் ராணி, பாஜக சாா்பில் சுதா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் ராணி 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 வாக்குகளும், பாஜக 5 வாக்குகளும் பெற்றனா்.

இந் நகராட்சி துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பேபி தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.