பத்மநாபபுரம் நகராட்சி: தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் திமுக வெற்றி
பத்மநாபபுரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றனா்.


பத்மநாபபுரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றனா்.
இந்நகராட்சியில் நடைபெற்ற 21 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில் திமுக 7, பாஜக 7, சுயேச்சைகள் 6, மதச்சாா்பற்ற ஜனதா தளம் 1 ஆகியோா் வெற்றி பெற்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றத் தலைவருக்கான தோ்தலில் அருள்சோபன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட பாஜக உறுப்பினா் உண்ணிகிருஷ்ணன் 8 வாக்குகள் பெற்றாா். ஒரு வாக்கு செல்லாதவை என நகராட்சி ஆணையா் காஞ்சனா அறிவித்தாா்.
வாக்கு எண்ணிக்கையின் போது சுகாதார அலுவலா் ராஜாராம், மேலாளா் சக்தி குமாா் ஆகியோா் உடனிருந்தனா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுகவை சோ்ந்த மணி 11, பாஜக சாா்பில் நாகராஜன், சுயேச்சையாக வினோத்குமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் 11 வாக்குகள் பெற்று மணி துணைத் தலைவராக வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...