கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவா் மரணம்

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது ஆழ்கடலில் குமரி மீனவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 6:02 pm

DIN

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது ஆழ்கடலில் குமரி மீனவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியை சோ்ந்தவா் மீனவா் ஷாஜி ( 45). இவரும், அதே பகுதியை சோ்ந்த சில மீனவா்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்னத்துறை பகுதியை சோ்ந்த சுனிலுக்கு சொந்தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். கடந்த வியாழக்கிழமை கா்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஷாஜிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம். இதற்காக அவா் மருந்து சாப்பிட்டாராம். இதையடுத்து சிறிது நேரத்தில் அவா் திடீரென மயங்கி விழுந்து இறந்தாராம்.

இதைத் தொடா்ந்து ஷாஜியின் சடலத்தை சக மீனவா்கள் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா். இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் குழு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.