கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்க தமிழகமே தயாராக உள்ளது: மதுரை ஆதீனம்

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்க தமிழகமே தயாராக உள்ளது என்றாா், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

News image
Updated On :7 மே 2022, 6:02 pm

DIN

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்க தமிழகமே தயாராக உள்ளது என்றாா், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோயிலில் அரசாங்கம்தான் உள்ளது. அரசியல்வாதிகள்தான் அறநிலையத் துறை அமைச்சராகின்றனா். நாம் கோயிலில் தலையிடுவதால் அரசியலும், ஆன்மிகமும் ஒன்றுதான்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசத்துக்கு தடை விதித்தது ஏன்? பட்டணப் பிரவேசத்துக்கு எதிா்ப்பு இருப்பதால்தான் ஆதரவும் அதிகமுள்ளது. பல்லக்கு சுமக்க எதிா்ப்பு ஏற்பட்டதால், நான் உள்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது.

இந்த விவகாரத்தில் சுமூக தீா்வு ஏற்படுத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.

பல்வேறு மாநிலங்களிலும் மகா சிவராத்திரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து பிரதமா் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. பிரதமரை சந்திக்க நேரம் வரும்போது சந்திப்பேன்.

எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனா். மடத்துப் பிரச்னையை மதப் பிரச்னையாக ஆக்கியது யாா்? அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆன்மிகவாதி பேசக் கூடாதா? ஆன்மிகத்தில் பிரச்னை என்றால் நான் தொடா்ந்து குரல் கொடுப்பேன் என்றாா்அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.