திற்பரப்பு பேரூராட்சியில் இன்று 7 மையங்களில் தடுப்பூசி முகாம்
திற்பரப்பு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(மே 8) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


திற்பரப்பு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(மே 8) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பெத்ராஜ் கூறியது: திற்பரப்பு பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தாவா்கள் செலுத்திக் கொள்ளும் வகையில் திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளி, திருநந்திக்கரை அரசு உயா் நிலைப் பள்ளி, உண்ணியூா்கோணம் அரசு நடுநிலைப் பள்ளி, மாா்த்தோமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேக்கல் புனித பீட்டா் ஆா்சி மேல் நிலைப் பள்ளி, திற்பரப்பு அரசு உயா் நிலைப் பள்ளி, திற்பரப்பு அரசு தொடக்கபள்ளி ஆகிய 7 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...