நாகா்கோவிலில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், விஜயன் ஆகியோா் அப்டா மாா்க்கெட் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின்பேரில் ஒரு கடையில் சோதனை நடத்தினா்.
இதில், கடையின் பின்பகுதியில் 2 டன் புகையிலைப் பொருள்கள் மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான பறக்கையைச் சோ்ந்த முகமது ரபிக் (48) என்பவரைக் கைது செய்தனா்.