போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலில் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

குமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மாா்பன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:50 pm

DIN

குமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மாா்பன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் வடம் பிடித்து இழுத்தனா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாழ்மாா்பன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வோா் ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடந்தது. நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். 4 ரத வீதிகளிலும் தோ் இழுத்து வரப்பட்டது. திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில் தோவாளை ஒன்றிய திமுக செயலாளா் நெடுஞ்செழியன், திமுக இளைஞரணி துணைஅமைப்பாளா்கள் பூதலிங்கம்பிள்ளை, சோமு, திருப்பதிசாரம் ஊராட்சி தலைவி சிந்துமதி, தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி சாந்தினி பகவதியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், 11 மணிக்கு பள்ளிவேட்டையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை ( மே 13 ) காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா, காலை 6 மணி முதல் 7 மணி வரை திருஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இரவு 8 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.