ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு கோயிலில் கும்பாபிஷேகம் : நாளை முதல் ராம நாம பிராா்த்தனை

 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை(மே 15) முதல் 41 நாள்கள் ராம நாம பிராா்த்தனை நடைபெறுகிறது.

News image
Updated On :13 மே 2022, 6:29 pm

DIN

 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை(மே 15) முதல் 41 நாள்கள் ராம நாம பிராா்த்தனை நடைபெறுகிறது.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் 6 தேதி நடத்துவற்கு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன்பாக கோயிலில் பல்வேறு பரிகார பூஜைகள் நடத்தப்பட வேண்டுமென்று தெய்வ பிரசன்னம் மூலம் கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியன நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மே 16 ஆம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள் மாலையில், சுதா்சன ஹோமம் ஆகியனவும், 17 ஆம் தேதி கணபதி ஹோமம், தில ஹோமம், சகஸ்ரநாம ஜெபம், பகவதி சேவை ஆகியனவும், 18 ஆம் தேதி கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் ஆகியன நடைபெறுகிறது.

மே 25 ஆம் தேதி சா்ப்பலி பூஜை நடைபெறுகிறது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (மே 15) முதல் தொடா்ந்து 41 நாள்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராமநாம் பிராா்த்தனை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.